"தடைகள் தமிழனுக்கல்ல என தரணியெங்கும் முழங்குவோம்"

Friday, August 17, 2007 - - 4 Comments


பெயரை மாற்றலாம் பிறப்பை மாற்ற முடியுமா?
பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டதே மனித வாழ்க்கை. பிறப்பிலிருந்து இறப்புவரையான காலம் வரையும் மனிதன் போராட வேண்டியுள்ளது. இந்தப்போராட்டம் நாம் உயிர் வாழ்வதற்கு மட்டுமன்றி எமது அடையாளங்களை தக்கவைத்துக் கொள்வதற்குமாகும்.ஒரு மனிதன் தன்னை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் அம்சங்கள் அவனுக்குரிய அடையாளம் என்பதினுள் அடங்கும்.ஆனால் அடையாளங்களை இழந்துதான் வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது. அண்மையில் இடம்பெற்ற சம்பவமொன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் மாணவர்கள் தமது இறுதி ஆண்டுக் கல்வியை வெளிநாடுகளில் தொடரும் வாய்ப்பு ஒன்று உள்ளது. இதில் இணையவிரும்புவோருக்கான ஒன்றுகூடல் அண்மையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. ஏராளமான தமிழ் மாணவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். தமிழர்களைப் பொறுத்தவரையில் கொழும்பு மற்றும் வெளிநாடுகள் இரண்டுமே ஒன்றுதானே. ஏனெனில் இரண்டுமே நமது சொந்தமண் இல்லையே. எனவே வெளிநாட்டில் கல்விபயில அவர்கள் ஆசைப்பட்டதில் தவறேதுமில்லை என நினைக்கிறேன்.
இதில் அவுஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களின் விபரங்கள் கூறப்பட்டபோது ஒருவிடயம் ஆணித்தரமாக கூறப்பட்டது.
"people who was born in jaffna or Batticalo, We are very sorry."
ஆக யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்களினதும், மட்டக்களப்பில் பிறந்தவர்களினதும் எதிர்காலக் கனவுகளுக்கு அவுஸ்திரேலிய அரசு ஆப்பு வைத்துள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது.தமிழன் சொந்தமண்ணிலிருந்து கல்வி பயில இயலாமையால் அந்நிய தேசத்தில் சுற்றிவளைப்புக்கள், சோதனைச்சாவடிகள் இல்லாத இடத்தில் சிறிது காலம்தங்கி கல்விபயில கூடியதாயிருக்கும் ஒரேயொரு வழியையும் அடைப்பதன் நோக்கம் என்ன?
தமிழர்களை பாமரர்களாக்குவதா? அல்லது தமிழன் எவ்வளவு அல்லல்பட்டாலும் இலங்கையில்தான் கற்கவேண்டுமென்பதா? அல்லது தமிழர்கள் தமது பிறப்பை மறைத்து சொந்த அடையாளங்களை இழந்து கல்வியை தொடருவார்கள் என்ற எதிர்பார்ப்பினாலா?
யாழ்ப்பாணத்தவர்களும், மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களும் செய்த பாவமென்ன?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கூறப்போவது யார்?எவருமில்லை.நாமாகத்தான் விடைகாண வேண்டும்.தொடரும் இத்தகைய புறக்கணிப்புக்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.ஆனால் யாழ்ப்பாணத்தமிழர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் புறக்கணித்ததன் மூலம் எதையும் சாதிக்கப்போவதில்லை.
அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.கல்வி ஒன்றுதான் யாழ்ப்பாணத்தவர்களின் நிலையான சொத்து.எத்தகைய இடர் வந்த போதும் அவர்கள் அதனை இழக்கவில்லை. இழக்கப்போவதுமில்லை.ஏனெனில் குப்பி விளக்கில் படித்த(படிக்கின்ற) பரம்பரையல்லவோ?
எனவே இத்தகைய தடைகள் என்றுமே தமிழனின் கல்வித்தாகத்தை தடுக்கப்போவதில்லை.
"தடைகள் தமிழனுக்கல்ல என தரணியெங்கும் முழங்குவோம்"

This entry was posted on 1:16 AM You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

Anonymous said...

தோழா,
முழங்குவோம் இறுதி சொட்டு இரத்தம் இருக்கும் வரை தமிழனென்று.......................... . பதைகள் திற்க்கப்படுவதில்லை. திறப்பிக்கப்படுகின்றன................... . முயற்சிப்போம்.

Anonymous said...

ungalukku ulageme aappu vaikkuthe...intha veddi pecchai kuraichcu kondu ungalukku neengale vaichirukkira aappai edukkirathuku valiyai paarungo...

Anonymous said...

I heard that now they are accepting North East applications. Better find it out from the authorized people.

வனம் said...

எனக்கு தோன்றுவது இதுதான்

'தூயவர்கள் துணிந்து விட்டால் பகை கண்டு சோர்வதில்லை'